ஞாயிறு
மே 4
1. படைப்பை நினைவுகூர்தல்
௧. படைப்பின் முதல் நாளில் கடவுள் எதைப் படைத்தார்? ஆதியாகமம் 1:3–5.
"படைப்பின் வார்த்தையின் ஆரம்பத்தில், இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது." — The Desire of Ages, p. 464.
உ. உலகம் படைக்கப்பட்டபோது யார் உடனிருந்தார்கள் - வெறும் பார்வையாளராக அல்ல, ஆனால் ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக? ஆதியாகமம் 1:1, 2; யோவான் 1:1, 2; கொலோசெயர் 1:16.
"ஆதியிலே சிருஷ்டிப்பின் சகல கிரியைகளிலும் தேவன் வெளிப்பட்டார். கிறிஸ்துவே வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தினார். அவரே பூமியை அழகினாலும், காற்றை கீதத்தினாலும் நிரப்பினார். பூமியிலும், காற்றிலும், வானத்திலும் உள்ள அனைத்தின் மீதும், அவர் பிதாவின் அன்பின் செய்தியை எழுதினார். —. The Desire of Ages, p. 20.
"விண்வெளியில் உலகங்களை நிலைத்திருக்கச் யெய்த கரம் மற்றும் அவற்றின் ஒழுங்கான ஏற்பாடு மற்றும் அயராத செயல்பாட்டில் கடவுளின், பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கரம், நமக்காக சிலுவையில் ஆணியடிக்கப்பட்ட கரமாகும்." — Education, p. 132.
திங்கள்
மே 5
2. பாலைவனத்தில் ஒளி
௧. இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் எவ்வாறு வழிநடத்தப்பட்டனர்? யாத்திராகமம் 13:21, 22. மேகஸ்தம்பத்திலும் அக்கினிஸ்தம்பத்திலும் மூடப்பட்டிருக்கும் பிரசன்னத்தை விளக்குக? யாத்திராகமம் 13:21 (முதல் பகுதி); 1 கொரிந்தியர் 10:1–4.
"தேவன் தம்முடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்தியதில், ஒளி எப்போதும் அவருடைய பிரசன்னத்தின் அடையாளமாக இருந்தது. ஆரம்பத்தில் படைப்பின் வார்த்தையில், இருளிலிருந்து ஒளி பிரகாசித்தது. பகலில் மேகஸ்தம்பத்திலும், இரவில் அக்கினிஸ்தம்பத்திலும் ஒளி மறைக்கப்பட்டு, இஸ்ரவேலின் திரளான சேனைகளை வழிநடத்திச் சென்றது." — The Desire of Ages, p. 464.
உ. பாலைவனத்தில் இஸ்ரவேலருடன் கிறிஸ்துவின் பிரசன்னத்தைப் பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது- தேவன் தம்முடைய ஜனங்களுக்கு என்ன பாதுகாப்பை வாக்குறுதியளித்தார்? சங்கீதம் 105:39; ஏசாயா 4:5, 6.
“ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் மிக அழகான மற்றும் ஆறுதலான பத்திகளில் ஒன்றில், தீய சக்திகளுடனான பெரிய இறுதிப் போராட்டத்தில் தம்முடைய மக்கள் மீதான கடவுளின் கவனிப்பைக் குறிக்க மேகம் மற்றும் அக்கினி ஸ்தம்பத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது." — Patriarchs and Prophets, p. 283.
செவ்வாய்
மே 6
3. தேவனுடைய வாசஸ்தலத்தில் வெளிச்சம்
௧. கிறிஸ்து ஆசரிப்புக் கூடாரத்தில் தம்முடைய பிரசன்னத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்? யாத்திராகமம் 40:34, 35.
“ ‘இஸ்ரவேலின் திரளான ஜனங்கள் ஆவலுடன் அந்தப் புனிதக் கட்டமைப்பைக் காண சூழ்ந்து கொண்டனர். அவர்கள் பயபக்தியுடன் அந்தக் காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மேகஸ்தம்பம் ஆலயத்தின் மீது மிதந்து வந்து இறங்கி அதைச் சூழ்ந்தது. 'கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.' தெய்வீக மகத்துவத்தின் வெளிப்பாடு இருந்தது, சிறிது நேரம் மோசே கூட நுழைய முடியவில்லை. தங்கள் கைகளின் கிரியையை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளத்தை மக்கள் ஆழ்ந்த உணர்ச்சியுடன் கண்டனர். மகிழ்ச்சி ஆரவார ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லை. எல்லோர் மீதும் ஒரு பயபக்தி படர்ந்திருந்தது. ஆனால் அவர்களுடைய இருதயங்களின் மகிழ்ச்சி ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி வழிந்தது, தேவன் அவர்களோடு தங்கியிருக்க வேண்டுமென்று அவர்கள் தாழ்ந்த, ஊக்கமான நன்றியுணர்வு வார்த்தைகளை முணுமுணுத்தார்கள்." —— Patriarchs and Prophets, pp. 349, 350.
"கிருபாசனத்திற்கு மேலே தெய்வீக பிரசன்னத்தின் வெளிப்பாடான ஷெகினா இருந்தது; கேருபீன்களின் நடுவிலிருந்து, தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தினார். தெய்வீக செய்திகள் சில நேரங்களில் மேகத்திலிருந்து ஒரு குரல் மூலம் பிரதான ஆசாரியனுக்கு தெரிவிக்கப்பட்டன. சில நேரங்களில் ஒப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதலைக் குறிக்க வலதுபுறத்தில் உள்ள தேவதூதர் மீது ஒரு ஒளி விழுந்தது, அல்லது மறுப்பு அல்லது நிராகரிப்பை வெளிப்படுத்த இடதுபுறத்தில் இருப்பவர் மீது ஒரு நிழல் அல்லது மேகம் தங்கியிருந்தது. - Ibid.
உ. ஆலயம் பிரதிஸ்டை செய்யப்பட்டதற்குப் பிற்பாடு என்ன நடந்தது? 2 நாளாகமம் 7:1.
"மலையில் மோசேக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படி, மிகவும் அற்புதமான ஒரு பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டது, பின்னர் கர்த்தரால் தாவீதுக்கு வழங்கப்பட்டது. பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் பரலோகத்திற்குரிய பரிசுத்த ஸ்தலத்தைப் போல உண்டாக்கப்பட்டது. பேழையின் உச்சியில் இருந்த கேருபீன்களோடுகூட, சாலொமோன் பெரிய அளவுள்ள வேறு இரண்டு தூதர்களையும் உண்டாக்கினார். இவர்கள் பேழையின் ஒவ்வொரு முனையிலும் நின்று, கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை எப்பொழுதும் காத்துக்கொள்ளும் பரலோக தூதர்களை பிரதிநிதித்துவம் செய்தனர். இந்தக் கூடாரத்தின் அழகையும் சிறப்பையும் வர்ணிக்க முடியாது. ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்தது போலவே அங்கேயும் பரிசுத்த பெட்டி பவித்திரமாகவும், பயபக்தியோடும் கொண்டுவரப்பட்டு, தரையின்மேல் நின்ற இரண்டு கம்பீரமான கேருபீன்களின் இறக்கைகளின் கீழே வைக்கப்பட்டிருந்தது.
"பரிசுத்தமான பாடகர் குழு தங்கள் குரல்களை அனைத்து வகையான இசைக்கருவிகளுடனும் ஒன்றிணைத்து, தேவனைத் துதித்தது. இசைவான குரல்கள், இசைக்கருவிகளுடன், ஆலயம் முழுவதும் எதிரொலித்து, எருசலேம் வழியாக காற்றில் கொண்டு செல்லப்பட்டபோது, கடவுளின் மகிமையின் மேகம் முன்பு கூடாரத்தை நிரப்பியபடியே, வீட்டை ஆட்கொண்டது. 'ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினபடியால், மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்ய நிற்கக்கூடாதபடிக்கு, கர்த்தருடைய மகிமை கர்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று' (1 இராஜாக்கள் 8:11). — Spiritual Gifts, vol. 4a, pp. 113, 114.
புதன்
மே 7
4. சுவிசேஷத்தின் ஒளி
௧. யோவான் 8:12-ல் உள்ள கிறிஸ்துவின் எந்த செய்தி நமக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது?
"இந்த சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அதைப் பிரகடனப்படுத்துவதில் ஈடுபட்டது அறிவார்ந்த இறையியலாளர்கள் அல்ல. இவர்கள் உண்மையுள்ள காவற்காரர்களாக இருந்து, சிரத்தையோடும் ஜெபத்தோடும் வேதவாக்கியங்களை ஆராய்ந்திருந்தால், இராக்காலத்தை அறிந்திருப்பார்கள்; நடக்கவிருக்கும் தீர்க்கதரிசன நிகழ்வுகள் அவர்களுக்கு திறந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு அந்தப் பொருப்பு வழங்கப்படவில்லை, அந்தச் செய்தி தாழ்மையான மனிதர்களால் வழங்கப்பட்டது. . . . எவர்கள் தேவன் கொடுத்த வெளிச்சத்திலிருந்து விலகவோ அல்லது அதை நாடுவதற்கு தங்களுக்கு அருகில் இருக்கும் போது அதைத் தேடாமல் புறக்கணிக்கிறார்களோ, அவர்கள் இருள்களில் விடப்படுவார்கள்." — The Great Controversy, p. 312
"நாம் வளமான, ஏராளமான, மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறுவதற்காக கர்த்தர் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். யோவான், கிறிஸ்துவைக் குறித்து எழுதுகிறார், 'அவருக்குள் ஜீவன் இருந்தது; அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." யோவான் 1:4. வாழ்க்கை ஒளியுடன் தொடர்புடையது, நீதியின் சூரியனிடமிருந்து நமக்கு ஒளி இல்லையென்றால், அவரில் நமக்கு ஜீவன் இல்லை. ஆனால் இந்த ஒளி ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது, நாம் ஒளியிலிருந்து விலகும்போதுதான் இருள் நம்மீது வருகிறது. [யோவான் 8:12 மேற்கோள்.] நம்மைச் சுற்றியுள்ள உலகில் ஒளி இல்லாமல் வாழ்க்கை இருக்க முடியாது. சூரியன் தனது பிரகாசத்தை விலக்கிக் கொண்டால், அனைத்து தாவரங்களும், விலங்குகளும் முடிவுக்கு வந்துவிடும். நீதியின் சூரியனின் ஒளிக்கற்றைகளின் கீழ் நம்மை வைக்காவிட்டால் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையை அடைய முடியாது என்ற உண்மையை இது விளக்குகிறது. இருட்டறையில் பூச்செடியை வைத்தால், அது விரைவில் வாடி, இறந்துவிடும்; அதனால் நாம் சில ஆன்மீக வாழ்க்கையைப் பெறலாம், ஆனால் சந்தேகம் மற்றும் இருண்ட சூழ்நிலையில் வாழ்வதன் மூலம் அதை இழக்கிறோம்.” — Sons and Daughters of God, p. 281.
உ. இயேசுவிடம் நாம் திரும்பும்போது என்ன நம்பிக்கை வருகிறது? 2 கொரிந்தியர் 3:18.
"ஒரு மலர் சூரியனை நோக்கித் திரும்புவது போல, அதன் பிரகாசமான கதிர்கள் அதன் அழகையும் சமச்சீர்மையையும் பூரணப்படுத்த உதவக்கூடும், அவ்வாறே கிறிஸ்துவின் சீடர்கள் நீதியின் சூரியனிடம் திரும்ப வேண்டும், பரலோகத்தின் ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கவும், அவர்களின் குணாதிசயங்களை பரிபூரணப்படுத்தவும், கடவுளுடைய விஷயங்களில் அவர்களுக்கு ஆழமான மற்றும் நிலையான அனுபவத்தை அளிக்கவும். தெய்வீக அருளால் நமது மனித முயற்சியை ஒன்றிணைக்க நாம் விரும்பினால், கிறிஸ்துவின் மூலம் நமக்கு எட்டக்கூடிய ஆசீர்வாதங்களை கற்பனை செய்வது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. —Ibid., p. 26.
"தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஓர்மையுள்ள நோக்கத்தோடும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒளிக்கு ஊக்கமாய்ச் செவிகொடுப்பவனாகவும் இருக்கிறவன் அதிக வெளிச்சத்தைப் பெறுவான்; அந்த ஆத்மாவுக்கு எல்லா சத்தியத்தையும் நோக்கி வழிகாட்ட பரலோகத்தின் பிரகாசமான நட்சத்திரங்கள் அனுப்பப்படும். — The Great Controversy, p. 312.
வியாழன்
மே 8
5. பிரதிபலித்த ஒளி
௧. உலகத்தின் ஒளியைப் பற்றி பவுல் குறிப்பிடுவதால் நாம் எவ்வாறு உயர்த்தப்படலாம்? 2 கொரிந்தியர் 4:6.
"தேவனைப் பற்றிய மகிமையான கருத்துக்கள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கட்டும். உங்கள் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையுடன் மறைக்கப்பட்ட இணைப்புகளால் பின்னப்படட்டும். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கக் கட்டளையிட்டவர், உங்கள் இருதயத்திலே பிரகாசிக்க சித்தமாயிருக்கிறார், இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையை அறிகிற அறிவாகிய ஒளியைக் கொடுக்க சித்தமாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய காரியங்களை எடுத்து உங்களுக்குக் காண்பித்து, கீழ்ப்படிதலுள்ள இருதயத்தில் ஜீவனுள்ள வல்லமையாக அவற்றை வெளிப்படுத்துவார். கிறிஸ்து உங்களை எல்லையற்ற வாசலுக்கு அழைத்துச் செல்வார். திரைக்கு அப்பாற்பட்ட மகிமையை நீங்கள் கண்டு, நமக்காக பரிந்து பேச எப்பொழுதும் உயிரோடிருக்கிறவரின் போதுமானதை மனுஷருக்கு வெளிப்படுத்தலாம்." — Christ’s Object Lessons, p. 149.
"மனிதகுலத்தின் வடிவத்தில் அவரது சொந்த மகிமையின் வெளிப்பாடு பரலோகத்தை மனிதர்களுக்கு மிக அருகில் கொண்டு வரும், உள் ஆலயத்தை அலங்கரிக்கும் அழகு இரட்சகர் வாசம் செய்யும் ஒவ்வொரு ஆத்துமாவிலும் காணப்படும். நிலைத்திருக்கும் கிறிஸ்துவின் மகிமையால் மனுஷர் கவரப்படுவார்கள். இவ்வாறு கடவுளிடம் வென்ற அநேக ஆத்துமாக்களிடமிருந்து துதியும் நன்றியும் செலுத்தும் நீரோட்டங்களில், மகத்தான கொடையாளருக்கு மகிமை மீண்டும் பாயும்.
"எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஏசாயா 60:1. மணவாளனைச் சந்திக்கப் போகிறவர்களுக்கு இந்தச் செய்தி கொடுக்கப்படுகிறது. கிறிஸ்து வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வருகிறார். அவர் தம்முடைய சொந்த மகிமையோடும், பிதாவின் மகிமையோடும் வருகிறார். அவர் எல்லா பரிசுத்த தூதர்களுடன் வருகிறார். உலகமெங்கும் இருளில் மூழ்கியிருக்கும்போது, பரிசுத்தவான்களுடைய ஒவ்வொரு வாசஸ்தலத்திலும் வெளிச்சம் இருக்கும். அவரது இரண்டாம் வருகையின் தோற்றத்தின் முதல் ஒளியை அவர்கள் பிடிப்பார்கள். மாசற்ற ஒளி அவரது மகிமையிலிருந்து பிரகாசிக்கும் மீட்பராகிய கிறிஸ்து, அவரை சேவித்த அனைவராலும் போற்றப்படுவார். துன்மார்க்கர் அவருடைய சமுகத்தைவிட்டு ஓடிப்போகையில், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் களிகூருவார்கள்." —Ibid., pp. 420, 421.
வெள்ளி
மே 9
தனிப்பட்ட மதிப்பாய்வு கேள்விகள்
1. படைப்பின் வேலையில் தெய்வத்துவத்தைப் பற்றி வேதாகமம் எவ்வாறு கற்பிக்கிறது?
2. பாலைவனத்தில் இயேசு தம்முடைய ஜனங்களுக்கு எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கவும்.
3. கிறிஸ்துவின் ஒளி எவ்வாறு ஆசரிப்புக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பிரகாசித்தது?
4. ஆலய பிரதிஷ்டையில் இயேசு எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கவும்.
5. கிறிஸ்து எவ்வாறு தம்மை நமக்கும் நம் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்?